2014 ஆம் ஆண்டு திறமைக்கான தேடல் விருது விழா கல்முனை சாஹிராக் கல்லூரியில்






எம்.பைஷல் இஸ்மாயில்-

2014 ஆம் ஆண்டு திறமைக்கான தேடல் விருது விழாவும் மருதூர் அன்ஸாரின் மனிதம் திரைப்பட இருவெட்டு வெளியீடும், முபாறக் அப்துல் மஜீத் எழுதிய இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள் என்ற நூல் வெளியீடும் மனிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் இன்று (07) மாலை 5.00 மணியளவில் கல்முனை சாஹிராக் கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஊடகவியலாளர்களான அஸ்லம் மௌலானா, எம்.ஏ.றமீஸ், எம்.எப்.நவாஸ், மனிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் ஆகியோர்களுக்கு திறமைக்கான தேடல் விருது, மருதூர் அன்ஸாரின் மனிதம் திரைப்பட இருவெட்டு மற்றும் முபாறக் அப்துல் மஜீத் எழுதிய இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள் என்ற நூல் ஆகியவற்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிருக்கு ஏ.எல்.அன்சார் பதக்கம் அணிவித்து கௌரவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :