பொலிஸ் ஜீப்பை முந்திச்சென்ற ஆட்டோ சாரதியை மறித்து பொலிசார் தாக்குதல் சாரதி வைத்தியசாலையில்

ண்டையார்பேட்ட: புழல், சக்திவேல் நகரை சேர்ந்தவர் இப்ராஹிம் பாஷா (32), சரக்கு ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை, புழலில் இருந்து செங்குன்றம் நோக்கி சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்ற போலீஸ் ஜீப்பை கடந்து வேகமாக சென்றார். 

இதனால் ஆத்திரமடைந்த போலீசார், இப்ராஹிம் பாஷா ஆட்டோவை மறித்து நிறுத் தினர்.பின்னர், ஜீப்பில் இருந்து இறங்கிய 3 போலீஸ்காரர்கள், ‘போலீஸ் ஜீப்பையே முந்தி செல்கிறாயா’ என கூறி, லத்தி மற்றும் கையால் சரமாரியாக அவரை தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதில், காயமடைந்த இப்ராஹிம் பாஷா, புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார் புகாரை வாங்க மறுத்தனர். இதையடுத்து, அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :