மலேசிய விமானத்தின் பாகங்களை ரோபோக்களை பயன்படுத்தி தேடும் நடவடிக்கை - படங்கள்


இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கருதப்படும் மலேசிய விமானத்தின் பாகங்களை ரோபோக்களை பயன்படுத்தி தேட திட்டமிடப்பட்டுள்ளது.

239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் 8ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டது. பெய்ஜிங்கை சென்றடைவதற்கு முன்னரே விமானம் மாயமானது.

பெர்த் பகுதியில் இருந்து 1,670 கிலோமீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங்கள் இருக்கும் என நம்புவதாக தேடுதல் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேடுதல் கப்பல்களுக்கு கிடைக்கப்பெற்ற சிக்னல்களை கொண்டு, இந்த தகவலை உறுதி செய்துள்ளதாக தேடுதல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கருதப்படும் மலேசிய விமானத்தின் பாகங்களை ரோபோக்கள் மூலம் தேட திட்டமிடப்பட்டுள்ளது. தேடுதல் பரப்பளவு குறைக்கப்படும் பட்சத்தில் இந்த ரோபோ நீருக்கு அடியில் சென்று தேடுதலை நடத்தும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :