எழுத்துமூல உடன்பாடு எட்டப்படாதவரை போராட்டம் தொடரும்.-தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர்!



ல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர் பணி பகிஷ்கரிப்பு தொடர்பில் பல்வேறுபட்ட போலியான அறிக்கைகள் வெளிவந்துள்ள போதும் அவைகள் தொடர்பில் தாங்கள் அலட்டிக்கொள்ள வில்லை என்றும் அரசாங்கத்தின் சார்பில் எழுத்துமூல உத்தரவாதம் கிடைக்கும்வரை பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் தாங்களது கோரிக்கைகள் பலற்றை முன்வைத்து தொடர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இன்றைய எட்டாம் நாள் நிகழ்வுகள், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமிலின் வழிகாட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.எம். நௌபர் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை வெளியிட்டனர்.
















 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :