எம். பைஷல் இஸ்மையில் -
அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டுச் சந்தியில் சற்று முன்னர் 14.04.2104 இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இருவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருதில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது மோட்டார் வாகனத்தில் பயணித்து வந்த இருவரில் ஒருவருக்கு தலையில் மிகவும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக எமது இம்போட் மிரர் செய்தியாளர் இம்போட்மிரருக்கு தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகள் குறித்து பொலிஸாரினர் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது..
0 comments :
Post a Comment