இலங்கை அணி வீரர்களுக்கு தலா 2 1/2 கோடி ரூபா பரிசு


ருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தலா இரண்டரைக் கோடி ரூபா வீதம் 'பரிசு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதுவரை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரே தடவையில் இலங்கை அணி வீரர்களுக்கு கிடைத்த மிக கூடுதலான தொகை இது எனவும் அறிவிக்கப்படுகிறது.

அண்மையில் பங்களாதேஷில் நடைபெற்ற 20 க்கு இருபது உலகக் கிண்ண போட்டியை இலங்கை அணி முதற் தடவையாக சுவீகரித்தது.

புதுவருட உதயத்துடன் இலங்கை அணி வீரர்கள் 15 பேருக்கும் பரிசுத் தொகையில் தலா 25 மில்லியன் ரூபா வீதம் அன்பளிப்பு செய்ய இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தவிசாளர் ஹுஸ்னி மொஹமட் தெரிவித்தார். இதன் படி சகல அணி வீரர்களுக்கும் மொத்தமாக 2.8 மில்லியன் ரூபா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 20 க்கு இருபது கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை அணிக்கு உலக கிரிக்கெட் சபை வழங்கிய பரிசுத் தொகை இவ்வாறாக அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 15 வீரர்களுக்கும் சரிசமமாக பகிரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :