ஒட்டிப் பிறந்த பெண் குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவும் சவுதி மன்னர் அப்துல்லா



அரப் நியூஸ்-
ரு தலைகளும் ஒட்டிப் பிறந்த இந்த சிரிய பெண் குழந்தைகளுக்கு தற்போது ஒரு வருடமும் எட்டு மாதமும் ஆகிறது .. தாகி, யாகின் என்பது இந்த இரு சிறுமிகளின் பெயர். 

இந்த இரு குழந்தைகளின் மூளைப் பகுதி தனித் தனியாக இருப்பதால் பிரிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. 

வசதியற்ற இந்த இரு சிறுமிகளின் பெற்றோர் சவுதி மன்னர் அப்துல்லாவிடம் குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கான உதவியை நாடினர்.

இந்த பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்ற மன்னர் இரு குழந்தைகளையும் பிரிக்கும் உத்தரவை மருத்துவ குழுவுக்கு இட்டுள்ளார். 

இந்த குழந்தையின் உறவினர்கள் மன்னரின் இந்த தயாள குணத்தை வெகுவாக பாராட்டினர். 

சுகாதார அமைச்சர் அப்துல்லா அல் ரபியாவுக்கும் தங்கள் நனறிகளை தெரிவித்துக் கொண்டனர். 

இறைவன் நாடினால் இந்த குழந்தைகள் இருவரும் தனித் தனியே பிரித்தெடுக்கப்பட்டு சுகமான வாழ்வு வாழ்வர். 

இந்த சிறுமிகளை பிரித்தெடுக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற நாமும் நமது பிரார்த்தனையை இறைவனிடம் வைப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :