மலேசிய விமானம் நிலநடுக்கத்தால் கடலுக்குள் இழுக்கப்பட்டதா ?- புதிய சந்தேகம் - வீடியோ


SNM-
கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் புறப்பட்ட மலேசிய விமானம் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் தென் சீனக் கடற்பகுதிக்கு மேலே பறந்தபோது மாயமானது. ஒரு வாரமாக தேடுதல் பணிகள் நடைபெற்றும் அந்த விமானம் எங்கு விழுந்தது? அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை. தற்போது அந்தமான் கடற்பகுதியில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

விமானம் மாயமானது தொடர்பாக பல்வேறு யூக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், நிலநடுக்கம் காரணமாக விமானம் இழுக்கப்பட்டிருக்கலாம் என்ற புதிய சந்தேகமும் எழுந்துள்ளது.

தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, விமானம் கடைசியாக காணப்பட்ட இடத்தில் இருந்து 72 மைல்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதுவும், விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மலேசியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இதன் காரணமாக விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என்றும் சீனாவின் நிலநடுக்க ஆராய்ச்சிக் குழுவினர் நம்புகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :