என்னுடைய தந்தையின் கொலை வழக்கில் தமக்கு சாதகமான தீர்ப்பு கிட்டுமேயானால் இந்த நாட்டில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்பட்டிருப்பதற்கு அதுவே சிறந்த முன்னுதாரணமாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மேல் மாகாண சபையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
இதேவேளை, தன்னை பிரபல மாக்கியது ஊடகங்களே. அதனை நான் மறக்கமாட்டேன். இருப்பினும் தற்போது இணையத்தளங்களினூடாக என்னைப்பற்றி மிகவும் மோசமான முறையில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இச் செய்திகள் முற்றிலும் தவறானது. இந் நாட்டின் கலாசாரம் மற்றும் ஒழுக்கவியல்களுக்கு அமைவாகவே பெற்றோர்கள் என்னை வளர்த்துள்ளனர்.
மேல் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு 'ஹிருணிகா உங்களின் குரல்" என்ற இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment