நாடளாவிய ரீதியில் இம்மாதம் 10ம் திகதி முதல் 16ம் திகதிவரை சுகாதார அமைச்சினால் அனுஷ்டிக்கப்படுகின்ற தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று-12ம் பிரிவு சிவில் பாதுகாப்புக் குழுவும், கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து நடாத்திய வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு அக்கரைப்பற்று உப தபாலக வீதியில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று-12ம் பிரிவு சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவர் தலைமையில் நடைபெற்ற இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எல்.ஹாஜா மொஹிதீன், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எம்.இப்றாஹிம், பள்ளிவாயல் செயலாளர்.எம்.ஜலால்தீன்,சிவில் பாதுகாப்புக் குழுக்ளுக்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் எம்.அப்துல்லா,பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பாரிஸ், அக்கரைப்பற்று-12ம் பிரிவு; செயலாளர் எம்.ஜி.எம். பஹ்றுதின் மௌலவி வை.எல்.எம்.முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமகால வீதி விபத்துக்கள் சம்பந்தமாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எல்.ஹாஜா மொஹிதீன் வழங்கியதோடு,வீதி விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி படங்களும் காட்டப்பட்டன.
செயலாளர் எம்.ஜி.எம். பஹ்றுதின் நன்றியுரை வழங்கினாh
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment