கனராஜா என்பவரின் நிதியில் வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கள் - படங்கள்



ந.குகதர்சன்-
ம்பாறை மாவட்டத்தில் நற்பிட்டிமுனை பகுதியில் கிழக்கு இந்து ஒன்றியத்தின் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த கனராஜா என்பவரின் நிதி உதவியில் சேவோ அமைப்பின் மூலம் வறிய மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கிழக்கு இந்து ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், ஒன்றியத்தின் உப செயலாளருமான எஸ்.சரவணபவனின் ஏற்பாட்டின் கீழ் ஜேர்மனில் வசிக்கும் ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த கனராஜா என்பவரின் நிதி உதவியால் வறிய மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சேவோ அமைப்பின் பணிப்பாளர் எஸ்.சத்தியநாதன் தலைமையில் சேவோ அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இவ் உதவிகளை வழங்கி வைத்தார்.
இந்நிழ்வில் கிழக்கு இந்து ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், ஒள்றியத்தின் உபசெயலாளருமான எஸ்.சரவணபவன், சேவோ அமைப்பின் பிரதிநிதிகள், உதவி பெறும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :