பிரபல பாடகியான ஜிஞ்சர் என அழைக்கப்படும் ஜூடித் வைட் எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமவை பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவருக்கு வேட்புமனுவை வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் அவர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.
ஜிஞ்சருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கியதன் மூலம் மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்கர்களின் வாக்குகளை கவர முடியும் என ஆளும் கட்சி எண்ணுவதாக கூறப்படுகிறது.

0 comments :
Post a Comment