ந.குகதர்ஷன்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிகல பிரதேசத்தை அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த 37 குடும்பங்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கை திங்கட்கிழமை நடைபெற்றது.
கடந்த சுமார் 24 வருடங்களுக்கு முன்னர் போர்ச் சூழலின் போது இடம்பெயர்ந்த இவர்களை மீள்குடியமர்த்தும் பணி வெடிபொருட்கள் அகற்றும் நடவடிக்கையினால் தாமதமடைந்திருந்தது.
இக்குடும்பங்களுக்கு தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கான சீமேந்துப் பைகள் மற்றும் கூரைத் தகடுகள் வழங்கும் நிகழ்வு கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் அமைச்சின் செயாலாளர் ஜனக சுகதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருங்காலிச்சோலை மற்றும் கள்ளிச்சை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இக்குடும்பங்கள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து கிரான் பிரதேசத்திலுள்ள உறவினர் நண்பர்கள் வீடுகளில் இதுவரைகாலமும் தற்காலிகமாகத் தங்கியிருந்தனர்.
யுத்தம் முடிவடைந்த போதிலும் குறித்த பகுதிகளில் வெடிபொருட்களை அகற்றும் பணி நடைபெற்றதால் மீள்குடியேற்றும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிகல பிரதேசத்தை அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த 37 குடும்பங்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கை திங்கட்கிழமை நடைபெற்றது.
கடந்த சுமார் 24 வருடங்களுக்கு முன்னர் போர்ச் சூழலின் போது இடம்பெயர்ந்த இவர்களை மீள்குடியமர்த்தும் பணி வெடிபொருட்கள் அகற்றும் நடவடிக்கையினால் தாமதமடைந்திருந்தது.
இக்குடும்பங்களுக்கு தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கான சீமேந்துப் பைகள் மற்றும் கூரைத் தகடுகள் வழங்கும் நிகழ்வு கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் அமைச்சின் செயாலாளர் ஜனக சுகதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருங்காலிச்சோலை மற்றும் கள்ளிச்சை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இக்குடும்பங்கள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து கிரான் பிரதேசத்திலுள்ள உறவினர் நண்பர்கள் வீடுகளில் இதுவரைகாலமும் தற்காலிகமாகத் தங்கியிருந்தனர்.
யுத்தம் முடிவடைந்த போதிலும் குறித்த பகுதிகளில் வெடிபொருட்களை அகற்றும் பணி நடைபெற்றதால் மீள்குடியேற்றும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment