விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன், ‘சகாப்தம்Õ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார்.
சண்முக பாண்டியன் அறிமுக நிகழ்ச்சியும் படத்தின் துவக்க விழாவும் விஜயகாந்த் வீட்டில் நேற்று நடந்தது. மகனை அறிமுகப்படுத்தி விஜயகாந்த் பேசியதாவது:இரண்டு மூன்று நாளைக்கு முன்தான் இந்த நிகழ்ச்சி நடத்துவது பற்றி முடிவு செய்தேன்.
எல்லோருக்கும் அழைப்பு விடுத்தேன். ஜெயலலிதாவுக்கு பயந்துகொண்டு யாரும் வரவில்லை. எனக்கு அதுபற்றி கவலையும் இல்லை. பயமும் இல்லை. என் மகன்களிடம் என் விருப்பத்தை திணித்ததே இல்லை. மூத்தவன் விஜய பிரபாகரன் ஆர்கிடெக் படிக்க விருப்பினான். படிக்கச் சொன்னேன். இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்க விரும்பினான். நடிகனாக்கிவிட்டேன். நான் சினிமாவை மறந்து ரொம்ப நாளாகிவிட்டது. இப்போது அரசியலில்தான் முழு கவனம் செலுத்துகிறேன். என் மகன் நடிப்பது பற்றி இனி என் மனைவிதான் பேசுவார்.
என் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு குறைந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் பிறகு பதில் சொல்கிறேன். ஏற்காடு தேர்தலில் நிற்க பயமா என்று கேட்டார்கள். அவர்களுக்குத்தான் பயம். எனது படத்தை, பாடலை ஒளிபரப்ப பயம். என் படங்களை வாங்கி முடக்கி வைத்துவிட்டார்கள். என் தொண்டர்கள் இருக்கும் வரை எனக்கு பயம் கிடையாது. என்னை யாரும் அசைக்க முடியாது.
ஏதாவது பேசினால், அவர் கட்சிக்காரர்கள் மேல் கோபப்படுகிறார், அடிக்கிறார் என்கிறார்கள். என் கட்சி என் குடும்பம் மாதிரி. குடும்பத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் கண்டிப்பதில்லையா, அடிப்பதில்லையா அதைத்தான் நான் செய்கிறேன். தெருவில் போகிற வருகிறவர்களையா அடிக்கிறேன். குடிக்கிறார் என்கிறார்கள். குடித்தால் என்ன தப்பு. தமிழ்நாடு முழுவதும் தெருவுக்குத் தெரு கடையை திறந்து வைத்திருக்கிறீர்களே, எதற்கு வைத்திருக்கிறீர்கள்? இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள், சத்யராஜ், பிரபு, கார்த்தி, விக்ரம் பிரபு, நந்தா, கருணாஸ், மயில்சாமி இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.எஸ்.ரவிகுமார், விக்ரமன், அரவிந்தராஜ், ஆர்.கே.செல்வமணி, படத்தின் இயக்குனர் டி.சந்தோஷ்குமார் ராஜன், ஒளிப்பதிவாளர் எஸ்.கே.ஏ.பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். எல்.கே.சுதீஷ் வரவேற்றார். வசனகர்த்தா வேலுமணி நன்றி கூறினார்.
என் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு குறைந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் பிறகு பதில் சொல்கிறேன். ஏற்காடு தேர்தலில் நிற்க பயமா என்று கேட்டார்கள். அவர்களுக்குத்தான் பயம். எனது படத்தை, பாடலை ஒளிபரப்ப பயம். என் படங்களை வாங்கி முடக்கி வைத்துவிட்டார்கள். என் தொண்டர்கள் இருக்கும் வரை எனக்கு பயம் கிடையாது. என்னை யாரும் அசைக்க முடியாது.
ஏதாவது பேசினால், அவர் கட்சிக்காரர்கள் மேல் கோபப்படுகிறார், அடிக்கிறார் என்கிறார்கள். என் கட்சி என் குடும்பம் மாதிரி. குடும்பத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் கண்டிப்பதில்லையா, அடிப்பதில்லையா அதைத்தான் நான் செய்கிறேன். தெருவில் போகிற வருகிறவர்களையா அடிக்கிறேன். குடிக்கிறார் என்கிறார்கள். குடித்தால் என்ன தப்பு. தமிழ்நாடு முழுவதும் தெருவுக்குத் தெரு கடையை திறந்து வைத்திருக்கிறீர்களே, எதற்கு வைத்திருக்கிறீர்கள்? இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள், சத்யராஜ், பிரபு, கார்த்தி, விக்ரம் பிரபு, நந்தா, கருணாஸ், மயில்சாமி இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.எஸ்.ரவிகுமார், விக்ரமன், அரவிந்தராஜ், ஆர்.கே.செல்வமணி, படத்தின் இயக்குனர் டி.சந்தோஷ்குமார் ராஜன், ஒளிப்பதிவாளர் எஸ்.கே.ஏ.பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். எல்.கே.சுதீஷ் வரவேற்றார். வசனகர்த்தா வேலுமணி நன்றி கூறினார்.
0 comments :
Post a Comment