சங்ககார தனது ஐம்பதாவது சதத்தை சொந்த மண்ணிலேயே தவறவிட்டார்

டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது ஐம்பதாவது சதத்தை இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்ககார இன்றைய தினம் சொந்த மண்ணிலேயே தவறவிட்டுள்ளார்.

தற்போது இலங்கை மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி ஹம்பந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இடம்பெற்று வருகின்றது. சற்று முன்னர் 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து களத்திலிருந்து வெளியேறினார். சதத்தை பூர்த்தி செய்வதற்கு இன்னும் 21 ஓட்டங்கள தேவைப்படுகின்ற நிலையில் ஆட்டமிழந்து அவர் 50வது சதத்தை தவற விட்டுள்ளார்.

குமார் சங்ககார இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 16 சதங்களையும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 33 சதங்களையும் கடந்துள்ளார். எனினும் இதுவரை சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் குமார் சங்ககார சதத்தை கடக்கவில்லை.

இலங்கை அணி சார்பாக இதுவரை எந்த வீரரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்கள் என்ற மைல் கல்லை கடக்கவில்லை. குமார் சங்ககார 49 சதங்களும் மஹே ஜயவர்தன 47 சதங்களையும் சனத் ஜயசூரிய 42 சதங்களையும் கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :