மாற்றுத் திறனாளிகளின் கலைத் திறமைகளை பார்த்து கண்ணீர் சிந்திய ஜனாதிபதி

மாற்றுத் திறனாளிகளின் கலைத் திறமைகளை பார்த்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்ணீர் சிந்திய சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டுக்கு சமாந்திரமாக நடைபெறும் இளைஞர் மாநாடு நேற்று ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி இவ்வாறு கண்ணீர் விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாற்றுத் திறன்களைக் கொண்ட இளைஞர் யுவதிகள் இணைந்து பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சனின் ஹீல் தி வேர்ல்ட் என்ற பாடலைப் பாடினார்கள். முக பாவனைகளுடன் மிகவும் உணர்வுபூர்வமாக இளைஞர் யுவதிகள் பாடலைப் பாடியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிகளை பார்வையிட்ட அனைவரும் பலத்த கரகோசம் எழுப்பி, பாராட்டு வெளியிட்டுள்ளனர். நிகழ்ச்சியை பார்வையிட்ட ஜனாதிபதி கண்ணீர் விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :