சிறுவர்களும் இளைஞர்களும் பெறுமதியான சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது - ஜனாதிபதி

சிறுவர்களும் இளைஞர்களும் நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்வதை தவறவிட்டுவிடுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளைஞர்கள், பெறுமதியான சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுநலவாய இளைஞர் மாநாடு கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த மாநாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஹம்பாந்தோட்டையிலுள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் வெளிநாடுகளைச்சேரந்த 154 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

கொழும்பில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் 23 ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாகவே இந்த மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :