பொ
துநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து இலங்கை விலகிக்கொள்ள வேண்டும் என்று ஜே.வி.பி கோரியுள்ளது. கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதத்தின் கீழ் இலங்கை பல ஆண்டுகளாக இருந்தது. இந்தநிலையில் சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்த நிலை தொடர்கிறது. பொதுநலவாய நாடுகளின் தலைமையை இன்னமும் பிரித்தானியாவே கொண்டிருக்கிறது.
தவிசாளர் நிலையை அங்கத்துவ நாடுகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த பதவியே அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் கிடைக்கும்.
இந்தநிலையில் பொதுநலவாய அமைப்பு என்பது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஒரு அங்கமேயாகும். எனவே அந்த அமைப்பில் இருந்து இலங்கை வெளியேற வேண்டும் என்று விஜித ஹேரத் கோரிக்கை விடுத்தார்.

0 comments :
Post a Comment