கிராண்ட்பாஸ் பழைய பள்ளிவாயல் அருகில் உள்ள அரச மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியது.
இம் மரத்தை அகற்றும் பணிகள் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் நடைபெற்று வருவதாக எமது நிருபர் தெரிவித்தார்.
கிராண்ட்பாஸ் விவகாரம் தொடர்பாக நேற்று புத்தசாசன அமைச்சில் இடம்பெற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரமே இந்த மரம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
முஸ்லிம் மக்கள் முன்னர் வழிபாடுகளில் ஈடுபட்டுவந்த வழிபாட்டுத்தலத்திற்கு மீண்டும் செல்வார்கள், தற்பொழுது அந்த இடத்தில் வழிபாடுகளுக்கு உட்படாத அரச மரம் ஒன்று உள்ளது, அதனை அங்கிருந்து அகற்றி முஸ்லிம் மக்கள் வழிபடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சர் பாட்டலீ சம்பிக்க ரணவக்க நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தது.

0 comments :
Post a Comment