ஆனமடுவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அநுக்ஷ பிரியதர்ஷன எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் பதில் நீதவான் மொஹமட் இக்பால் முன்னிலையில் சந்தேகநபர் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4ம் திகதி வைத்தியசாலை ஊழியர் ஒருவரை தாக்கினார் என்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் இவர் நேற்று மாலை பொலிஸில் சரணடைந்த பின் கைது செய்யப்பட்டார்.
பல்லம வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் மீது பல்லம நகரத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதாக பிரதேச சபை உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளானவர் வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினரின் சகோதரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment