கிழக்கு மாகாண கௌரவ முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மருதமுனை அல்மனார் கல்லூரிக்கு இன்று(சனிக்கிழமை)திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இப்பாடசாலையின் நீண்டகால தேவையாக இருந்து வருகின்ற விளையாட்டு மைதானம் மற்றும் இடப்பற்றாக்குறை, பௌதீக மற்றும் ஆளனி பற்றாக்குறை என்பன குறித்து கூடிய கவனம் செலுத்தியதுடன் இப்பாடசலை கல்வி சமூகத்துடனும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரகிப் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. அன்சில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment