13ஆம் திருத்த சட்டம் மாற்றம் கல்முனை மாநகரசபையில் உறுப்பினர் றியாஸ் எதிர்ப்பு

அகமட் எஸ். முகைடீன்

சிறுபான்மை இனத்தவரின் நலன் கருதி உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் இடம் பெறக்கூடாது என அரசாங்கத்தை கோருகின்ற பிரேரனை ஒன்று கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் இன்றைய (09.07.2013) சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்பட்டது.

ஜேஆர்-இராஜீவ் காந்தி ஒப்பந்தத்தின் மூலம் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதே 13வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டம் ஆகும். இதில் கைவைப்பது என்பது சிறுபான்மை இன மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகும்.

ஆகவே இந்த 13வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதில் எடுக்கும் நடவடிக்கையினை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த பிரேரனை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இப்பிரேரனை மீதான விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் மாத்திரம் எதிர்த்து வாக்களித்தார். ஏனைய மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்து இப்பிரேரனை நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை மாநகர சபையில் SLMC 11 உறுப்பினர்களும், TNA 4 உறுப்பினர்களும்> UPFA 2 உறுப்பினர்களும் ACMC 1 உறுப்பினரும் UNP 1 உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.

இதில் UPFA உறுப்பினர் ஏ.எம். ரியாஸ்13 வது திருத்த சட்டமூலத்துக்கு எதிரான பிரேரரனைக்கு எதிர்த்து வாக்களித்தார்.

 மற்றுமொரு UPFAஉறுப்பினர் ரஹ்மான் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ACMC உறுப்பினர் முபீத் பிரேரரனைக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் றகுமான் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :