வானிலை தொடர்பில் விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை குறித்து அறிக்கை கோரும் ஜனாதிபதி

சீரற்ற வானிலை குறித்து பொதுமக்கள் மற்றும் மீனவ சமூகத்திற்கு முன்னெச்சரிக்கை விடுப்பதற்காக செயற்பட்ட விதம் தொடர்பிலான அறிக்கையொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஜனாதிபதி இந்த அறிக்கையை கோரியுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிலையினால் 14 மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 24 மீனவர்கள் காயமடைந்துள்ளதாக இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடற்தொழில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :