அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குள் தஞ்சம் புகுந்து அங்கே சமையல் செய்யும் பொது மக்கள்.




 (எம்.பைஷல் இஸ்மாயில்)
டந்த சுனாமியினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று மக்களுக்காக நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை வழங்கக் கோரி இன்று காலை (05) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கடந்த சுனாமியின் போது வீடுகளை இழந்த குடும்பத்த தலைவர்கள் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் தங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை இதுரை வழங்காமல் இருப்பதைக் கண்டித்தும், அதனை வழங்குமாறு கோரியுமே இவ்வாறு தங்களின் படுக்கை, இருப்பு மற்றும் சாப்பாடு சமைக்கும் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகம் முன்பாக தங்களின் இருக்கைகளை அமைத்துக் கொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தும் கூட அரசாங்க அதிபர் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. என்றும் எங்களுக்கான வீடுகளை தரும்வரையில் இவ்விடத்தை விட்டு போவதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :