( நப்றிஸ் )
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமால் பெரேராவுக்கும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிக்குமிடையே கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் பற்றிய கலந்துரையாடல் நகர அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி, புதிய நகர அபிவிருத்தி மற்றும் நகரை அழகுபடுத்தல் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் இதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொள்வதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அடுத்த வாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு மேற்படி திட்டங்களை பார்வையிடவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமால் பெரேராவுக்கும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிக்குமிடையே கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டம் பற்றிய கலந்துரையாடல் நகர அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தி, புதிய நகர அபிவிருத்தி மற்றும் நகரை அழகுபடுத்தல் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் இதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொள்வதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
அடுத்த வாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு மேற்படி திட்டங்களை பார்வையிடவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment