
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவியை ஒடும் பஸ்சில் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண் 13 நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டார்.
நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலுவான சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை.
இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில், டெல்லி அருகே உள்ள குர்கானில் இரண்டு பெண்கள் ஓடும் காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், மெஹ்ராலி-குர்கான் சாலையில் உள்ள ஒரு மது விடுதிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த நபர்கள், லிப்ட் தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர். காரில் சென்றுகொண்டிருக்கும்போது அதில் இருந்த நபர்கள், அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு அந்த நபர்களின் பிடியில் இருந்து விடுபட்ட பெண்கள் இருவரும், தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 நபர்கள் மற்றும் கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.TCNN
0 comments :
Post a Comment