வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்.


வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இரண்டாயிரத்து 500 கைதிகளை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கொழும்பிலிருந்து சிறைக் கைதிகளை வெளியேற்றும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர கூறியுள்ளார்.

முதற்கட்டமாக இடவசதியுள்ள சிறைச்சாலைகளுக்கு படிப்படியாக கைதிகள் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

களுத்துறை, காலி, வட்டரெக்க ஆகிய சிறைச்சாலைகளுக்கு தற்போது வெலிக்கடையில் இருந்து கைதிகள் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள அனைத்துப் பெண் கைதிகளையும் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :