கல்முனை எம்.ஆர்.சி. கழகத்தினர் நடாத்திய எம்.ஆர்.சி. வெற்றிக்கிண்ணம்-2013


(எஸ்.அஷ்ரப்கான்)

ல்முனை எம்.ஆர்.சி. கழகத்தினர் நடாத்திய எம்.ஆர்.சி.
வெற்றிக்கிண்ணம்-2013 சுற்றுப்போட்டியில் சாயந்தமருது பிளைங் ஹோர்ஸ்
விளையாட்டுக்கழகம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று கிண்ணத்தை
சுவீகரித்துக்கொண்டது.

10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி
கடந்த இருவாரங்களாக கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் நடைபெற்று
வந்தது. இப்போட்டியில் பிரதேசத்தின் 30க்கும் மேற்பட்ட கழகங்கள்
பங்குபற்றின.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இறுதிப்போட்டிக்கு தெரிவான கல்முனை டொபாஸஸ்
விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ்
விளையாட்டுக்கழகம் மோதியது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ்
விளையாட்டுக்கழகம் களத்தடுப்பை ஏற்றுக்கொண்டது. இதனடிப்படையில் முதலில்
துடுப்பெடுத்தாடிய டொபாஸஸ் விளையாட்டுக்கழகம் 7.3 ஓவர்களில் சகல
விக்கெட்டுக்களையும் இழந்து 20 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக்கழகம் 3
ஓவர்களில் குறித்த இலக்கை அடைந்து 10 விக்கெட்டுக்களால் மாபெரும்
வெற்றியை பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் கிண்ணத்தை சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ்
விளையாட்டுக்கழகத்தின் எஸ். எம் றியாஸ் பெற்றுக்கொண்டதுடன்,
இச்சுற்றுப்போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக முஹம்மட் ஆரிப் தெரிவாகி
கிண்ணத்தை பெற்றக்கொண்டார்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் பா. அரியநேந்திரன், கௌரவ அதிதியாக கிழக்குமாகாண சபை
உறுப்பினர்களான எஸ். இராஜேஸ்வரன், கலையரசன் ஆகியோரும் விசேட அதிதிகளாக
கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான விஜயராஜா, ஜெயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கிவைத்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :