அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோருவதை அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் சிலர் ஆதரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரேஷ்ட அமைச்சர்களான, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டி.யூ குணசேகர மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே ஆதரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அமைச்சர்கள் மூவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அண்மையில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திலுள்ள சில சக்திகள் 13 ஆவது திருத்தத்தை எதிர்க்கும் நிலையில் இடதுசாரி அமைச்சர்களுடனான சந்திப்பு நம்பிக்கையளிப்பதாக தமிழ்த்தேசியக்கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கக்கூடாது என்றும் இந்த இடதுசாரி அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட அமைச்சர்களான, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டி.யூ குணசேகர மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே ஆதரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அமைச்சர்கள் மூவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அண்மையில் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திலுள்ள சில சக்திகள் 13 ஆவது திருத்தத்தை எதிர்க்கும் நிலையில் இடதுசாரி அமைச்சர்களுடனான சந்திப்பு நம்பிக்கையளிப்பதாக தமிழ்த்தேசியக்கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்கக்கூடாது என்றும் இந்த இடதுசாரி அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment