கல்முனையில் மகேசன் மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு.

( எஸ்.அஷ்ரப்கான் )


ண்மையில் கிழக்கில் ஏற்பட்ட மகேசன் மினி சூறாவளியினால் கல்முனை,
சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மீன்பிடி படகு
உரிமையாளர்களுக்கும் மீனவர்களுக்கும் 6 மில்லியன் ரூபா நஷ்டஈட்டுத் தொகை
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள்
சம்மேளத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.



இந்நிகழ்வு அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் மற்றும்
மீனவர்கள் சம்மேளத்தின் உயர்பீட தலைவர் ஏ.எம்.ஏ. சலாம் தலைமையில்
அண்மையில் சம்மேளத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள்
மற்றும் மீனவர்கள் சம்மேளத்தின் தலைவர் எம்.எஸ்.ஏ.ஹமீட் மற்றும் அம்பாறை
மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதன்போது பாதிக்கப்பட்ட 120 மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டதுடன்
அண்மையில் ஏற்பட்ட மகேசன் மினி சூறாவளியினால் கல்முனை பிரதேசத்தில் 5
மீன்பிடி படகுகளும், 10 சிறிய இயந்திரப் படகுகளும், 60 தோனிகளும் மற்றும்
300 துண்டு வலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல்
மீன்பிடி படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் சம்மேளத்தின் தலைவர்
எம்.எஸ்.ஏ.ஹமீட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :