அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி முதல் இடம்.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

திவிநெகும புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் ஆகக் கூடுதலான சேமிப்புக்களை சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி சேமித்து அம்பாறை மாவட்டத்தில்
முதல் இடத்தைப் பெற்றுள்ளதாக சாய்ந்தமருது சமுர்த்தி மகா சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தெரிவித்தார்.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இலங்கை சமுர்;த்தி அதிகார சபையும் இணைந்து திவிநெகும புத்தாண்டு சேமிப்பு வாரத்தினை நாடளாவிய ரீதியிலுள்ள சமுர்த்தி வங்கிகளில் ஏப்ரல் 14 தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தியது.

அதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 43 சமுர்த்தி வங்கிகளில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி அங்கீகரிக்கப்பட்ட வைப்புக்களின் மூலம் ரூபா. 2,176,335.00 நிதியினை சேமிப்பாக சேமித்து முதலாம் இடத்தை பெற்றுள்ளதுடன் இரண்டாம், மூன்றாம் இடங்களை அம்பாறை வெருகடகொட சமுர்த்தி வங்கியும், நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியும் பெற்றுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வருட புத்தாண்டு சேமிப்பு வாரத்தில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளமையும் இவ்வருடம் முதலாம் இடத்தை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :