அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - ரணில்

ரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கும் 21ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்திற்கும் ஆதரவு வழங்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்த எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றியடையச் செய்ய அனைத்து சக்திகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் அனைத்து தவறான நடவடிக்கைகளையும் எதிர்த்து போராட்டம் செய்ய தாம் தயார் எனவும் அதன் மூலம் 2014ம் ஆண்டில் ஆட்சி மாற்றத்தை செய்யும் அரசாங்கத்தை அமைப்பதே ஐதேகவின் நோக்கம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு நகரில் இன்று (11) இடம்பெற்ற ஐதேக கூட்டத்தில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :