பாலமுனையில் கவிதை நூல் வெளியீட்டு விழா



(பாலமுனை றனீஸ் ஆதம்)


பாலமுனை கலாசார அபிவிருத்தி மையம் மகிழ்ச்சியுடன் நடாத்தும் மின்ஹாஜ் மகா வித்தியாலய கலைப்பிரிவு மாணவன் எஸ்.எச்.ஏ.முபீத் (பாலமுனை முபீத்) எழுதிய 'கொலுசுச் சத்தம்' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2013.04.14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணிக்கு கலாபூஷனம் ஆசுகவி அன்புடீன் தலைமையில் பாலமுனை இப்னுஸீனா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பு நிர்மானமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் கௌரவ எம்.எஸ்.உதுமாலெவ்வை (MPC) அவர்களும்,

 கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஏ.எல்.எம்.நஸீர் (MPC) அட்டாளைச்சேனைப் பிரதேச சபை தவிசாளர் கௌரவ எம்.ஏ.அன்சில் LLB அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ எம்.ஏ.றாசிக் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

எனவே அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றார் பாலமுனை கலாசார அபிவிருத்தி மையத்தின் தலைவர் ஐ.அகமட் சிறாஜ் அவர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :