இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சண்டையிட்ட ஒருவரும் தடுத்தவரும் பலி.

ம்பிலிபிட்டிய - பாணமுர, ஜயவிங்கும்புர பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் மோதலில் சென்று முடிந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

இந்த மோதல் நேற்று (13) இரவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மோதலில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டதோடு மோதலை தடுக்க முயன்ற ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்த்தன தெரிவித்தார். 

கொலை தொடர்பில் ஒருவர் பாணமுர பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 
பாணமுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :