எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விண்ணப்பங்களைக் கோரவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 19 பேரையும் மன்னார் மாவட்டத்துக்கு 8பேரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 8பேரும் வவுனியா மாவட்டத்துக்கு 9பேரும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு 7பேருமாக மொத்தம் 51பேர் கட்சியால் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந்நிலையில், முதன்முறையாக வட மாகாணசபை நிறுவப்படவுள்ளது. முன்னர் வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபை இயங்கிய நிலையில் அது நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரிக்கப்பட்டது.
மொத்தமாக நியமன உறுப்பினர்கள் உட்பட 38 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றார்கள். அரசியல் சாசன விதிகளின்படி வட மாகாணசபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதியினால் தேர்தல் நிறைவேற்று அதிகாரிக்கு அரச கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment