ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பழமரக் கன்று வழங்கும் நிகழ்வு.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் திவிநெகும திட்டத்தில் புதுவருடத்தில் பழமரக் கன்றுகள் நடும் திட்டத்தில் பொது மக்களுக்கு பழமரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு 

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்றது. கிராம சேவகர் பிரிவில் இரு நூறு (200) பயனாளிகளுக்கு மாமரக் கன்றுகள் வீதம் பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்தி இருநூறு (1200) மாமரக் கன்றுகள் வினியோகிக்கப்பட்டன. 

இதில் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு மற்றும் மீறாவோடை கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மாமரக்கன்றுகள் வினியோகிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள பட்டதாரி பயிலுனர்களான எம்.எஸ்.நவாஸ், எம்.எம்.அஸ்பர், எம்.ஐ.சம்ரியா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :