தன் மனைவியை வைத்துக் கொன்டு தரம் கெட்ட வாழ்கையொன்றை தமதாக்கிக் கொள்வது சரிதானோ...?


தன் மனைவியை  வைத்துக் கொன்டு 
தரம் கெட்ட வாழ்கையொன்றை
தமதாக்கிக் கொள்வது சரிதானோ...?   

மனமாறும் உணர்வுக்குள் 
முகமாறும் சூழ்ச்சிக்குள்
 மூச்சுக்கு வழிதேடி
மோசத்தில் விழுந்தது 
தேவை தானா ..?

.மானத்தை விற்ற பின் 
பொருமையிழந்த    தூக்கத்தை
ஏனந்தக் கண்  தேடுது ? - அது
இரவை நோக்கி ஏன்  இருளை சாடுது?
 


 சுகமான நிகழ்வுகள் 
 சுமையாகும் நினைவுகள் 
சுமைதாங்க்கு ம்  போது மனைவியை தேடுது..?

தூசாய் பறக்கின்ற அழுக்கெல்லாம் 
புழுதியாய்  போகின்ற
துரு நாற்றத்தின்  நிலையாகினாய்- வெறும்
காசுக்கு அவமானமானாய் ...?
இழிவுக்கு உள்ளானாய் ..?
 
 இச்சைக்கு  ஆசை காட்டும் 
 பேதயை  வெறுக்காது 
அழகெனப் புகழ் கிறாய்! - அவர்
 காமத்தை சரியென்கிறாய்?
 
காமத்தில் வீச்சுக்குள்
விழுகின்ற விட்டில்கள்,
வெளிச்சத்தின் தூது கொண்டு  - அந்த
லாம்புக்குக்கும் பங்கங்குண்டு!
 
வீசுகின்ற வேகத்தில்,
விளையாட்டு வேடத்தில்,
விடியாத இரவானது! - விட்டில்
விலைபேசும் உறவானது!
 
விலைபேசும் விட்டில்கள்
விழைகின்ற போதெல்லாம்
விருந்தாக லாம்பான்தேன்? - அது
லாம்பிடம்  சொலலாததேன்?
 
வெஞ்சுடரின் தீ 
 விதையான சாம்பல் தான் !
நல்லவற்றைப் புரியாதவள்! - நான்
நன்மைகளைப்  அறியாதவள்!
பாவத்தை விளங்காதவள் ...!
































கலைமகள் ஹிதாயா றிஸ்வி


மனமாறும் உணர்வுக்குள் 
முகமாறும் சூழ்ச்சிக்குள்
மூச்சுக்கு வழிதேடி
மோசத்தில் விழுந்தது 
தேவை தானா ..?

.மானத்தை விற்ற பின் 
பொருமையிழந்த தூக்கத்தை
ஏனந்தக் கண் தேடுது ? - அது
இரவை நோக்கி ஏன் இருளை சாடுது?



சுகமான நிகழ்வுகள் 
சுமையாகும் நினைவுகள் 
சுமைதாங்க்கு ம் போது மனைவியை தேடுது..?

தூசாய் பறக்கின்ற அழுக்கெல்லாம் 
புழுதியாய் போகின்ற
துரு நாற்றத்தின் நிலையாகினாய்- வெறும்
காசுக்கு அவமானமானாய் ...?
இழிவுக்கு உள்ளானாய் ..?

இச்சைக்கு ஆசை காட்டும் 
பேதயை வெறுக்காது 
அழகெனப் புகழ் கிறாய்! - அவர்
காமத்தை சரியென்கிறாய்?

காமத்தில் வீச்சுக்குள்
விழுகின்ற விட்டில்கள்,
வெளிச்சத்தின் தூது கொண்டு - அந்த
லாம்புக்குக்கும் பங்கங்குண்டு!

வீசுகின்ற வேகத்தில்,
விளையாட்டு வேடத்தில்,
விடியாத இரவானது! - விட்டில்
விலைபேசும் உறவானது!

விலைபேசும் விட்டில்கள்
விழைகின்ற போதெல்லாம்
விருந்தாக லாம்பான்தேன்? - அது
லாம்பிடம் சொலலாததேன்?

வெஞ்சுடரின் தீ 
விதையான சாம்பல் தான் !
நல்லவற்றைப் புரியாதவள்! - நான்
நன்மைகளைப் அறியாதவள்!
பாவத்தை விளங்காதவள் ...!


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :