மனமாறும் உணர்வுக்குள்
முகமாறும் சூழ்ச்சிக்குள்
மூச்சுக்கு வழிதேடி
மோசத்தில் விழுந்தது
தேவை தானா ..?
.மானத்தை விற்ற பின்
பொருமையிழந்த தூக்கத்தை
ஏனந்தக் கண் தேடுது ? - அது
இரவை நோக்கி ஏன் இருளை சாடுது?
சுகமான நிகழ்வுகள்
சுமையாகும் நினைவுகள்
சுமைதாங்க்கு ம் போது மனைவியை தேடுது..?
தூசாய் பறக்கின்ற அழுக்கெல்லாம்
புழுதியாய் போகின்ற
துரு நாற்றத்தின் நிலையாகினாய்- வெறும்
காசுக்கு அவமானமானாய் ...?
இழிவுக்கு உள்ளானாய் ..?
இச்சைக்கு ஆசை காட்டும்
பேதயை வெறுக்காது
அழகெனப் புகழ் கிறாய்! - அவர்
காமத்தை சரியென்கிறாய்?
காமத்தில் வீச்சுக்குள்
விழுகின்ற விட்டில்கள்,
வெளிச்சத்தின் தூது கொண்டு - அந்த
லாம்புக்குக்கும் பங்கங்குண்டு!
வீசுகின்ற வேகத்தில்,
விளையாட்டு வேடத்தில்,
விடியாத இரவானது! - விட்டில்
விலைபேசும் உறவானது!
விலைபேசும் விட்டில்கள்
விழைகின்ற போதெல்லாம்
விருந்தாக லாம்பான்தேன்? - அது
லாம்பிடம் சொலலாததேன்?
வெஞ்சுடரின் தீ
விதையான சாம்பல் தான் !
நல்லவற்றைப் புரியாதவள்! - நான்
நன்மைகளைப் அறியாதவள்!
பாவத்தை விளங்காதவள் ...!
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment