பிரதம நீதியரசர் ஷிராணி பதவி விலக மறுப்பு: பொலிஸ் பாதுகாப்பு கோரி கடிதம்


ஷிராணி பண்டாரநாயக்கவின் பிரதம நீதியரசர் பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்ற போதும் அவர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தயார் இல்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் தற்போதும் என்ற வகையில் அவர் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்டரீதியாக பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தன் மீதான குற்றப் பிரேரணை மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என சர்வதேச ரீதியாக கண்டணங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் பதவி விலகலை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எதிர்வரும் வாரத்தில் ஷிராணி பண்டாரநாயக்க நீதியரசர் குழுத் தலைவராக வழக்கு விசாரணைகளின் போது சமூகமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி எதிர்வரும் 15 மற்றும் 17ஆம் திகதிகளில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளில் சமூகமளிக்கவுள்ளதாக பதியப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :