அமெரிக்காவில் வகுப்பறையிலேயே ஆசிரியர் கண்முன்னே மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் எல்மான்ட் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது மன வளர்ச்சி குன்றிய 15 வயது மாணவியை, அதே வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து உள்ளார். ஆசிரியர் வகுப்பறையில் இருக்கும்போது, மேஜைக்கு அடியில் இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை தடுக்காத ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த வகுப்பறையில் 13 மாணவர்களும், பாதிக்கப்பட்ட மாணவியும் இருந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
இப்படி என்றால் அமெரிக்கா..... உருப்படும்.

0 comments :
Post a Comment