ஒவ்வொரு குடும்பமும் வீட்டுத் தோட்ட பயிரிடுகையில் ஈடுபட வேண்டும் – றிசாத்

Share on
வடக்கில் வாழும் மக்களின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு குடும்பமும் வீட்டுத் தோட்ட பயிரிடுகையில் ஈடுபட வேண்டும் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா முருகனுர் விவசாய பயிற்சி கல்லுாரியில் வவுனியா பாடசாலைகளுக்கு விவசாய உபகரணங்களை வழங
்கி வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் திருமதி.சகீலா பானு தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசும் போது –

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனைக்கு அமைவாக பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் இன்று வடக்கில் விவசயாத் துறை புத்துாக்கம் கண்டுவருகின்றது.

திவிநெகும திட்டம் மூலம் விவசாயத் துறைக்கு பெரும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,வடக்கில் மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளை முன்னெடுக்க பல திட்டங்களையும்,மத்திய அரசின் கீழ், மாகாண அரசு முன்னெடுத்துவருவதாகவும் அமைச்சர் கூறினார்

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் ஷாஹிப் மொஹதீன்,அமைச்சரின் இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத்.வவுனியா நகர சபை உறுப்பி்னர் அப்துல் பாரியும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :