ஏறாவூரில் வெள்ளம் : நகர சபைக்கு இடம்மாறியது பிரதேச செயலகம்

வெள்ளத்தால் சூழப்பட்ட ஏறாவூர் பிரதேச செயலகம் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் ஏறாவூர் நகர சபைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது என பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தெரிவித்தார்.ஏறாவூர் பிரதேச செயலகம் தற்சமயம் நிலவும் கடும் மழையுடன் கூடிய வெள்ளப்பெருக்கின் காரணமாக வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளதால் அதிகாரிகளும் ஊழியர்களும் கடமைக்குச் சென்று அலுவல்
களைக் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து ஏறாவூர் நகரசபைக்கு ஏறாவூர் பிரதேச செயலகத்தை மாற்றும் ஏற்பாடுகளை நகர பிதா அலிஸாஹிர் மௌலானாவும் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபாவும் மேற்கொண்டனர். இதேவேளை ஏறாவூரில் சுமார் ஏழாயிரம் குடும்பங்கள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் இவர்களுக்கான அவசர உதவிகளை வழங்க தாம் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தெரிவித்தார்.

செய்திகளைப்படித்த பெருமதிப்பிற்குரிய நீங்கள் அப்படியே கீழே உள்ள இம்போட்மிரர் பேஸ் புக் இல் உள்ள லைக் ஐ கிளிக் பன்னி உச்சாகப்படுத்தலாம். நன்றி...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :