Share on
மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 இடங்களில் வியாழக்கிழமை (15.11.2012) ஐந்து மணி நேர மின் வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் 2012.11.15ந் திகதி (வியாழக்கிழமை) நண்பகல் 12.00 மணி தொடக்கம் மாலை 17.00 மணி வரை சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, மரப்பாலம், கரடியனாறு, இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பாலஞ்சோலை, ஐயங்கேணி, மிச்சி நகர், தளவாய், மீராகேணி, சதாம் உசைன் கிராமம், ஹிஸ்புல்லா கிராமம், கொம்மாதுறை, செங்கலடி, களுவங்கேணி, ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை மற்றும் ஊறணி வரை மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

0 comments :
Post a Comment