தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மருதமுனை பிரதேசத்தில் ஏழு பாடசாலைகளில் 75 மாணவர்கள் சித்தி.



கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-
டந்த வருடம் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் புதன்கிழமை(25-01-2023)இரவு வெளியாகின இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் மருதமுனையில் ஏழு பாடசாலைகளில் இருந்து 349 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அல்மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் 117 மாணவர்கள் தோற்றி 27 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.அல்-ஹம்றா வித்தியாலயத்தில் 53 மாணவர்கள் தோற்றி 20 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.அல்.-ஹிக்மா ஜுனியர் பாடசாலையில் 64 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 13 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அல்-மதீனா வித்தியாலயத்தில் 52 மாணவர்கள் தோற்றி 8 மாணவர்கள் சித்தியடைந்தள்ளனர்.அல்-மினன் வித்தியாலயத்தில் 21 மாணவர்கள் தோற்றி 4 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.பெரியநீலாவணைஅக்பர் வித்தியாலயத்தில் 14 மாணவர்கள் தோற்றி 2 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் 28 மாணவர்கள் தோற்றி 1 மாணவர் சித்தியடைந்துள்ளார்.

சித்தியடைந்த 75 மாணவர்களில் அல்மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவி முகம்மட் நிஹால் மரியம் 179 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலும், அல்-ஹம்றா வித்தியாலய மாணவி முகம்மட் றியாஸ் ஐலா 177 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்திலும், அல்மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவி நஸ்மி மரியம் 171 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :