கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜெம் செயத்திட்டத்தின் கீழ் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் கணித முகாம் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் வண. அருட்சகோதரர் சந்தியாகு செபமாலை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதிக் கல்வி பணிப்பாளர் ஆ.சஞ்சீவன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச.சரவணமுத்து ஓய்வு பெற்ற கணித பாட உதவி கல்விப் பணிப்பாளர் எஸ்.இலங்கநாதன், கணித பாட ஆசிரியர் ஆலோசகர் ரி.கிருணிவாசன், மற்றும் கணித பாட ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
சிறப்பு அம்சமாக மாணவர்களின் நான்கு வகையான கண்காட்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஓய்வு பெற்ற கல்முனை வலய கணித பாட உதவி கல்விப் பணிப்பாளர் எஸ்.இலங்கநாதன், ஆற்றிய சேவைக்காக கல்லூரியால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment