கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் கணித முகாம்..



வி.ரி. சகாதேவராஜா-
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜெம் செயத்திட்டத்தின் கீழ் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் கணித முகாம் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் வண. அருட்சகோதரர் சந்தியாகு செபமாலை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதிக் கல்வி பணிப்பாளர் ஆ.சஞ்சீவன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச.சரவணமுத்து ஓய்வு பெற்ற கணித பாட உதவி கல்விப் பணிப்பாளர் எஸ்.இலங்கநாதன், கணித பாட ஆசிரியர் ஆலோசகர் ரி.கிருணிவாசன், மற்றும் கணித பாட ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

சிறப்பு அம்சமாக மாணவர்களின் நான்கு வகையான கண்காட்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஓய்வு பெற்ற கல்முனை வலய கணித பாட உதவி கல்விப் பணிப்பாளர் எஸ்.இலங்கநாதன், ஆற்றிய சேவைக்காக கல்லூரியால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :