யாழில் அங்கஜனின் அலுவலகம் தீக்கரையானது!



யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

அதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. அரசாங்க ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டதோடு, மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய அரசாங்க உறுப்பினர்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.

நேற்று பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகமும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :