ஐக்கிய புறா பந்தய கழகத்தின் பரிசளிப்பு வைபகமும் ஒன்றுகூடலும் !



நூருல் ஹுதா உமர்-
க்கிய புறா பந்தய கழகத்தின் பரிசளிப்பு வைபகமும் ஒன்றுகூடலும் சாய்ந்தமருது பிரதேச காணிப்பயன்பாட்டு உத்தியோகத்தரும், ஐக்கிய புறா பந்தய கழகத்தின் தலைவருமான ஏ.எச்.முஹம்மட் சஞ்ஜிரின் தலைமையில் மருதமுனை கலாச்சார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (19) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை நீதிமன்ற உத்தியோகத்தரும், பைத்துல் ஹெல்ப் அமைப்பின் தலைவருமான எம்.எச். ரைஸுல் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் மேலும் கல்வியல் கல்லூரி பகுதிநேர விரிவுரையாளர் ஆசிரியர் டீ.எம். றிபாய் மற்றும் ஐக்கிய புறா பந்தய கழகத்தின் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அனுராதபுர புறா பந்தயம், தா அட வங்குவ புறா பந்தயம், மொனராகலை புறா பந்தயம் ஆகியவற்றில் பங்குபற்றிய புறாக்களின் சொந்தக்காரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிவைத்ததுடன், முதல் பத்து மற்றும் முதல் முப்பது இடங்களை புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும், சான்றிதழ்களும், வெற்றி கேடயங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :