நாட்டுக்குள் வ‌ரும் இஸ்லாமிய‌ புத்த‌க‌ங்க‌ள் பாதுகாப்பு அமைச்சின் அனும‌தியை பெற‌ வேண்டும் -உலமா கட்சி

நா
ட்டின் தேசிய‌ பாதுகாப்பு க‌ருதி நாட்டுக்குள் வ‌ரும் இஸ்லாமிய‌ புத்த‌க‌ங்க‌ள் பாது காப்பு அமைச்சின் அனும‌தியை பெற‌ வேண்டும் என்ற‌ ச‌ட்ட‌த்தை உல‌மா க‌ட்சி வ‌ர‌வேற்றிருப்ப‌துட‌ன் இஸ்லாம், இஸ்லாம் அல்லாத‌ அனைத்து புத்த‌க‌ங்க‌ளுக்கும் பாதுகாப்பு த‌ர‌ப்பின் அனும‌தி பெற‌ப்ப‌டுவ‌தே நிலையான‌ தேசிய‌ பாதுகாப்புக்கு உக‌ந்த‌து என‌ தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து

நாட்டுக்குள் இஸ்லாமிய‌ புத்த‌க‌ங்க‌ள் கொண்டு வ‌ர‌ முடியாது என‌ பாதுகாப்பு அமைச்சு ச‌ட்ட‌ம் போட‌வில்லை. மாறாக‌ வ‌ருகின்ற‌ புத்த‌க‌ங்க‌ள் பாதுகாப்பு த‌ர‌ப்பின் அனும‌தி பெற‌ப்பட‌ வேண்டும் என்றே ச‌ட்ட‌ம் போட‌ப்ப‌ட்டுள்ள‌து.

இது உண்மையில் மிக‌வும் வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌ ச‌ட்ட‌மாகும். நான் அறிய‌ ச‌வூதி அரேபியாவில் 40 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ உள்ள‌து.

இஸ்லாமிய‌ புத்த‌க‌மோ எந்த‌ புத்த‌க‌மோ விற்ப‌னைக்கு என‌ அல்ல‌து மொத்த‌மாக‌ வ‌ருமாயின் அது பாதுகாப்பு த‌ர‌ப்புக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு சோதிக்க‌ப்ப‌ட்ட‌ பின்பே அனும‌திக்க‌ப்ப‌டும். இத‌ற்கென‌ த‌ம்மாம் போன்ற‌ பிர‌தான‌ நுழை வாயில்க‌ளில் அர‌பு மொழி அல்லாத‌ உதார‌ண‌மாக‌ த‌மிழ் மொழியில் வ‌ரும் புத்த‌க‌ங்க‌ளை ஆராய‌வென‌ இல‌ங்கையை சேர்ந்த‌ மௌல‌விமாரும் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். அங்கு நீண்ட‌ கால‌ம் ப‌ணிபுரிந்த‌ புத்த‌ள‌த்தை சேர்ந்த‌ ந‌ண்ப‌ர் உவைஸ் மௌல‌வி அண்மையில் ம‌ர‌ண‌மானார்.

இல‌ங்கையில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ ஈஸ்ட‌ர் தாக்குத‌லுக்கு இஸ்லாமிய‌ புத்த‌க‌ங்க‌ளே கார‌ண‌ம் என்ற‌ க‌ருத்து சிங்க‌ள‌ ம‌க்களிட‌ம் உள்ள‌து. இக்க‌ருத்து ஏற்ப‌டுவ‌த‌ற்கு கார‌ண‌ம் ந‌ம‌து முஸ்லிம்க‌ள் கொடுத்த‌ பிழையான‌ விள‌க்க‌ங்க‌ளாகும்.

ஸ‌ஹ்ரானின் தாக்குத‌லுக்கு பிர‌தான‌ கார‌ண‌ம் ர‌ணில், மைத்திரி, ச‌ஜித் ஆட்சியில் முஸ்லிம்க‌ள் மீது அர‌ச‌ அனுச‌ரணையுட‌ன் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லும் அந்த‌ அரசின் ஊழ‌லை ம‌றைக்க‌ தாக்குத‌லுக்கான‌ அந்த‌ அர‌சின் ஆத‌ர‌வுமாகும்.

இந்த‌ நிலையில் புத்த‌க‌ங்க‌ளால் தீவிர‌வாத‌ம் தூண்ட‌ப்ப‌டுகிற‌து என‌ அர‌ச‌ த‌ர‌ப்பு சிந்திப்ப‌தை நாம் குறை காண‌ முடியாது. கார‌ண‌ம் இந்த‌ நாட்டில் ஏற்ப‌ட்ட‌ த‌மிழ்த்தீவிர‌ போராட்ட‌ம், ஜேவிபி போராட்ட‌ம் என்ப‌ன‌ கால்மார்க்ஸ், லெனின், மாவோ சேதுங் போன்ற‌ இட‌துசாரி புர‌ட்சியாள‌ர்க‌ளின் எழுத்துக்க‌ளால்தான் அநேக‌ நாடுக‌ளில் புர‌ட்சிக‌ள் வெடித்த‌ன‌. இந்தியாவில் இன்ன‌மும் க‌ம்யூனிச‌வாதிக‌ளில் ஒரு பிரிவின‌ர் ஆயுத‌ம் தூக்கி போராடுகின்ற‌ன‌ர்.

ஆக‌வே ந‌ம‌து நாட்டு ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ தேசிய‌ பாதுகாப்பு முக்கிய‌த்துவ்ம் கொடுப்ப‌தால் நாட்டுக்குள் வ‌ரும் அனைத்து இஸ்லாமிய‌, இஸ்லாம் அல்லாத‌ அனைத்து புத்த‌க‌ங்க‌ளும் பாது காப்பு அமைச்சின் அனும‌தி பெற‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌தையும் உல‌மா க‌ட்சி கோரிக்கையாக‌ முன் வைக்கிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :