கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் சுற்றுப்புர சூழல் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யும் நிகழ்வு அல்-ஹாமியா அரபிக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஏ.சீ.தஸ்தீக் (ஹாமி-மதனி) தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதில் கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரின் தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், கல்லூரி நிர்வாகம், பழைய மாணவர் சங்க நிர்வாகம், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் மற்றும் சுற்றுப்புற சூழல், புதர்கள் என்பன துப்புரவு செய்யப்பட்டது.
கல்முனை அல்-ஹாமியா அரபிக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கட்டார் கிளையின் அனுசரணையில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.