கடத்தப்பட்ட பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சுலைமானை விடுவிப்பதற்கு 2 கோடி ரூபாய் கப்பம் கோரப்படுவதற்கு முன்னதாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மாவனெல்ல காவற்துறை நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் மாவனெல்லையில் வைத்து இந்த சடலம் மீட்கப்பட்டது. இதன்போதே அவரது சடலம் பழுதடைந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கப்பம் கோரப்படுவதற்கு முன்னதாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும், மாவனெல்ல காவற்துறையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடை வர்த்தகரான மொஹமட் சுலைமான், தம்மிடம் ஆடைகளை கொள்வனவு செய்து பண மோசடி செய்த வர்த்தகர்கள் சிலருக்கு எதிராக குற்றபுலனாய்வு திணைக்களம் மற்றும் மோசடி விசாரணை பிரிவிலும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற வர்த்தகர்கள் ஐவர், வெளிநாட்டுக்கு செல்வதற்கு, நீதிமன்றம் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற வர்த்தகர்கள் ஐவர், வெளிநாட்டுக்கு செல்வதற்கு, நீதிமன்றம் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.