கடத்தப்பட்ட மொஹமட் சுலைமான் படுகொலை: முக்கிய தகவலொன்று வெளியாகியது..!

டத்தப்பட்ட பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சுலைமானை விடுவிப்பதற்கு 2 கோடி ரூபாய் கப்பம் கோரப்படுவதற்கு முன்னதாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மாவனெல்ல காவற்துறை நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் மாவனெல்லையில் வைத்து இந்த சடலம் மீட்கப்பட்டது. இதன்போதே அவரது சடலம் பழுதடைந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கப்பம் கோரப்படுவதற்கு முன்னதாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும், மாவனெல்ல காவற்துறையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடை வர்த்தகரான மொஹமட் சுலைமான், தம்மிடம் ஆடைகளை கொள்வனவு செய்து பண மோசடி செய்த வர்த்தகர்கள் சிலருக்கு எதிராக குற்றபுலனாய்வு திணைக்களம் மற்றும் மோசடி விசாரணை பிரிவிலும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற வர்த்தகர்கள் ஐவர், வெளிநாட்டுக்கு செல்வதற்கு, நீதிமன்றம் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -