சற்று முன்னர் ஹிக்­க­டுவ ஆல­யத்தில் பதற்றம் - நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தேரர்கள் குழு இஸ்தலத்தில்

நிதி மோசடி விசா­ரணைப் பிரிவை மூட வேண்டும் என வேண்­டுதல் செய்து ஹிக்­க­டுவ சீனி­கம ஆல­யத்தில் தேங்காய் உடைக்கப் போவ­தாக கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் அறி­வித்­தி­ருந்­த நிலையில் அந்த நிகழ்வு சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் தேரர்கள் மற்றும் பொதுமக்களுடன் நாமல் ராஜபக்ஷ, தினேஸ் குனவர்த்தன , குமார் வெல்கம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சீனி­கம ஆல­யத்தில் தேங்காய் உடைக்க இந்த குழுவினர் அங்கு ஆயத்தமான போது மற்றுமொரு குழுவினர் இவர்களுக்கு எதிராக, அந்த ஆலயத்துக்கு வந்து அவர்களுக்கு தம் எதிர்ப்பை காட்டியுள்ளனர். 

அவர்கள் தேஷாபிமானி ஜாதிக்க பெரமுன என்ற அமைப்பினர் ஆவர். 

அதன்போது இரு குழுக்களுக்கு இடையில் பிரச்சினை பெரிதாகவே தற்போது அங்கு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -