நிதி மோசடி விசாரணைப் பிரிவை மூட வேண்டும் என வேண்டுதல் செய்து ஹிக்கடுவ சீனிகம ஆலயத்தில் தேங்காய் உடைக்கப் போவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்திருந்த நிலையில் அந்த நிகழ்வு சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் தேரர்கள் மற்றும் பொதுமக்களுடன் நாமல் ராஜபக்ஷ, தினேஸ் குனவர்த்தன , குமார் வெல்கம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சீனிகம ஆலயத்தில் தேங்காய் உடைக்க இந்த குழுவினர் அங்கு ஆயத்தமான போது மற்றுமொரு குழுவினர் இவர்களுக்கு எதிராக, அந்த ஆலயத்துக்கு வந்து அவர்களுக்கு தம் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
அவர்கள் தேஷாபிமானி ஜாதிக்க பெரமுன என்ற அமைப்பினர் ஆவர்.
அதன்போது இரு குழுக்களுக்கு இடையில் பிரச்சினை பெரிதாகவே தற்போது அங்கு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.